*எந்தை அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க*
*1ஆம் அறிவு* - காமம்
*2ஆம் அறிவு* - பொறாமை
*3ஆம் அறிவு* - ஆசை
*4ஆம் அறிவு* - இறைவா!!!! நீயே எந்தனுக்கு பின் நான்கு திசைகளிலும் கூட!!! யாரும் இல்லை!!! யான்அனாதையே
*5ஆம் அறிவு* - புண்ணியம்
*6ஆம் அறிவு* - இறைவனை உணர்தல் ( இறைவா!!!உன்னைத்தவிர எந்தனுக்கு எதுவும் தேவை இல்லை )
*7ஆம் அறிவு* - இறைவனை அடைதல்
*8ஆம் அறிவு* - அஷ்டமா சித்தி
*9ஆம் அறிவு* - ………
*10ஆம் அறிவு* - …….
( அகத்திய பிரம்ம ரிஷி அருளிய நாடி வாக்கு ) 👇
சித்தன் அருள் - 1257 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை சபரிநாதன் சன்னதி!
சபரிமலை 18 படி விளக்கம்!!
இங்கு முதல் படி என்னதான்? குறிக்கின்றதென்றால் அப்பனே பின் காமம்!!
காமத்தை ஒழித்து விட்டாலே அடுத்த படி பின் ஏறிவிடலாம் அப்பனே!!!
ஆனால் முதல் படியிலே தோல்வியை அடைந்து விடுகின்றான் மனிதன்!!!
அப்படி இருக்கையில் இவ் ஐயனும் எப்படிதான்!!!??? கொடுப்பான்?? என்பேன் அப்பனே!!!!
அப்பனே அடுத்தது அடுத்த படி பொறாமை... அப்பனே அடுத்த படியில் பின் பொறாமையை விலக்கவேண்டும் என்பேன் அப்பனே!!!!
ஆனால் அதையும் மனிதர்கள் விலக்குவதில்லை என்பேன் அப்பனே பின் இரண்டாவது படியிலும்தோல்வி அடைந்து விடுகின்றான்!!!!
மற்றொரு படியில் அப்பனே( மூன்றாம் படி) ஆசைகள்!!!!
அப்படி ஆக வேண்டும் இப்படி ஆக வேண்டும் என்பது அதாவது மூன்றாவது படி அப்பனேஅப்பொழுதே தோல்வி அடைந்து விடுகின்றான் என்பேன் அப்பனே!!!
இவ் மூன்று படிகளுமே அப்பனே முக்கியமானவை!!!
இவ் மூன்று படிகளில் கூட இவ்வாறு நினைக்காது பின் எதையென்று ஏறினால் அப்பனே....வெற்றிஅடுத்த நான்காவது படிக்கு சென்று விடலாம்!!!!
ஆனால் மூன்று படிகளிலே மனிதன் தோல்வியடைவதால் அப்பனே ஐய்யனும் கூட அமைதியாக தான்இருக்கின்றான்!!! புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!
எதை எதை என்று அறிய அறிய அப்பனே நான்காவது படி என்பது அப்பனே!!!!
இறைவா!!!! நீயே எந்தனுக்கு பின் நான்கு திசைகளிலும் கூட!!! யாரும் இல்லை!!! யான்அனாதையே என்று சொல்லி ஏறினால் மட்டுமே அவனுடைய லீலைகள் பின் தொடரும் என்பேன்அப்பனே!!!!
அதாவது எதை எதை என்று அறிய அப்பனே ஐந்தாவது பின் படி என்பது கூட புண்ணியத்தைக்குறிக்கும்!!!
எதை என்று அறிய அறிய!!!!
பின் எவை என்று கூற பின் ஐயனே!!!! எந்தனுக்கு அதாவது புண்ணியத்தை யான் பல செய்யவேண்டும் அதனை தா!!!! என்று உணர்ந்தால் நீ ஐந்தாவது படியில் வெற்றி பெற்று விடலாம்என்பேன் அப்பனே!!!
ஆனால் ஐந்தாவது படியிலும் தோல்வி அடைந்து விடுகின்றான் நான்காவது படியிலும் கூடதோல்வியடைந்து விடுகின்றான் அப்பனே!!!!
இப்படி இருக்க ஐயன் எப்படித் தான் கொடுப்பான்??? என்பேன் அப்பனே!!!!
எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பல மனிதர்களுக்கும் கொடுத்து இருக்கின்றான்!!! ஆனால் படிகளில் ஏறும் பொழுது கூட அப்பனே எதை என்று உணர்ந்து!! உணர்ந்து!!!
ஐயப்பா!!!!! ஐயனே!!! என்று தான் ஏறிக் கொண்டிருக்கின்றார்கள் இன்னும் கூட பல மனிதர்கள்!!!! என்பேன் அப்பனே!!! நலமாகவே இதை இதை என்று அறிவதற்கு கூட அப்பனே எதை என்று அறியஅறிய
இவ் ஆறு(6) எதை எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் தேவையில்லை ஐய்யப்பா!!!! அனைத்தும் தேவை இல்லை என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால்
அவந்தன் ஏழாவது அறிவிற்கு சென்று விடுகின்றான்!!!
ஐயனே வந்து பின் கையைப் பிடித்து அழைத்து அனைத்து படிகளிலும் ஏற்றி விடுவான் என்பேன்அப்பனே!!!
இதுதான் சூட்சமம் என்பேன் அப்பனே!!!!!
ஆறு படிகள் வரை சொல்லிவிட்டேன் அப்பனே இன்னும் எதையென்று அறிந்து அறிந்து பின்எவையென்று உணர்ந்து உணர்ந்து பின் ஏழாவது எதை எதை என்று அறிய அப்பனே பின்சொல்கின்றேன் அப்பனே!!!!!
இவ் ஆறு படிகளை கடக்க வேண்டும் எதை என்று அறிய அறிய இவ் ஆறு படியை இப்படி கடந்தால்தான் மட்டுமே அப்பனே இவ் ஐயப்பனே எதையென்று உணர்ந்து உணர்ந்து நல்விதமாக கையைபிடித்து அனைத்து படிகளிலும் ஏறச் செய்து அப்பனே வெற்றியை நல்குவான் அப்பனே!!!!
இதுதான் ரகசியம் என்பேன் அப்பனே!!!!
🙏🙏🙏🙏🙏🙏
——————————-
நாடி வாக்கின் விளக்கம்:
*மனிதனின் 5ஆம் அறிவு மிக அதி அவசியம். இதை வைத்தே பல சாதனைகள் புரிய இயலும். இந்த 5ஆம் அறிவை மனிதன் பயண்படுத்தியதாக சரித்திரமே இல்லை. இந்த 5ஆம் அறிவு சரியான முறையில் பயன்படுத்தினால் அவனது பல சகத்திகளை அதிகரித்து அவனை சாதனையாளனாக்கும். உலகத்தை ஆள வைக்கும்*
*6ஆம் அறிவு குறைந்த பட்சம் 1 மணி நேர தியானம். ஆலயங்களில் இந்த 6ஆம் அறிவு இறைபலங்களை பலமடங்கு அதிகரிக்கும்*
*தானமும் (5ஆம் அறிவு) , தவமும் (6ஆம் அறிவு) செய்வாராகின் வானவர் நாடு (7ஆம் அறிவு இறை) வழி திறக்குமே* - ஔவை பாட்டி
*7ஆம் அறிவை அடைந்த உடன், இறைவன் கருணையால் 8ஆம் அறிவு(அஷ்டமா சித்தி)திறக்கும்.*
விதியின் வசம் - 1,2,3ஆம் அறிவு
*மனிதன் வசம் - 4,5,6ஆம் அறிவு*
*மனிதன் நினைத்தால் நிச்சயமாக விதியை 4,5,6ஆம் அறிவில் மூலம் வெல்ல இயலும். இதுவே சித்த ரகசியம்.*
1,2 3ஆம் அறிவு - பணம், வேலை, கடன், இல்லரம், மனிதன் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகள்.
இந்த 3 அறிவுக்கு மட்டும் அவனது முழு சிந்தனை ஓங்குவதால் கர்மங்கள் மழை போல சேரந்து கொண்டே இருக்கும்.
குறைந்த பட்சம் 5ஆம் அறிவான புண்ணியத்தை கையில் எடுத்தால் மட்டுமே நல் வாழ்வு.
இந்த 5ஆம் அறிவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற பதிவு
👇👇👇👇👇👇👇👇👇
https://siththarkalatchi.blogspot.com/2023/05/94.html?m=0ச
No comments:
Post a Comment