அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!
அகத்திய மாமுனி வாக்கு :- 12-12-2022
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே நலமாகவே எதை என்று உணர்ந்து உணர்ந்து கொடுப்பான் சனி தேவனே. அப்பனே ஆனாலும் எதை என்று அறிய அறிய சனி தேவனுக்கும் கோபங்கள். மனிதனுக்குஎன்னதான் கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு இருக்கின்றான் என்று கோபம் வந்துவிட்டால் அனைத்தும் எடுத்து விடுகின்றான் அப்பனே.
இதுதான் அவனுடைய செயல். அதனால் எதை என்று அறிய அவன் ( சனி தேவன் ) கொடுக்கும்போது இவற்றுக்கெல்லாம் காரணம் நிச்சயம் பின் இறைவனே ( ஈசனே) என்றுகூறிவிட்டால் சனியவன் பின் எதை என்று அறிய அறிய பின் மனம் சந்தோசமாகி அனைத்தும்கொடுத்து விடுவான் அப்பனே இப்பொழுதே எதை யான் சொல்வது.
No comments:
Post a Comment