“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, December 29, 2021

சித்தர்கள் ஆட்சி - 28 : அகத்தியம்



அகத்திய மஹரிஷி பாதம் காப்பு


அகத்தியத்தை எடுத்துக் கொள். அந்த அகத்தியத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு.அகத்தியத்தையே கனவுகாண். அகத்தியத்தை ஒட்டியே வாழந்து வா. மூளை, தசைகள்,நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு அகத்திய கருத்தேநிறைந்திருக்கட்டும். அந்த அகத்திய நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்து விடு.உங்கள் ஆத்ம வெற்றிக்கு இதுதான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவான்களாக விரும்பினால் -மற்றவர்களையும் பாக்கியவான்களாக்க விரும்பினால் – நம்முள் நாம் அகத்தியத்துள் மேலும் ஆழ்ந்துசென்றாக வேண்டும்.



அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக

Tuesday, December 28, 2021

சித்தர்கள் ஆட்சி - 27 : விதியே என்னால் மாற்ற முடியும்


 

6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு.


அனைவருக்கும் நலமேஆனாலும் ஒன்றைச்சொல்லுகின்றேன்சிறு பிரச்சினைகள் எவ்வாறுஎனபதையும் கூட விதியில் கூட ஒவ்வொருவருக்கும் இப்பொழுதும் கூட நல்முறைகளாக சிலவினைகள் தோன்றி தோன்றி வந்து கொண்டு இருக்கின்றதுஅதையும் யான் மாற்றுவேன்எதைபற்றியும் கவலை கொள்ள இருங்கள்விதியே என்னால் மாற்ற முடியும் அளவிற்க்கும் கூ தகுதிகள்இருக்கின்றதுஅதனால் நல்முறைகளாக அவ்விதியை தகுதியானவர்களுக்கே யான் வழங்குவேன்என்பேன்என்பேன் அவ்தகுதியை நீங்கள்தான் வளரத்துக்கொள்ள வேண்டும்புன்னியங்கள் பலபுன்னியங்கள் பல தர்ம காரியங்கள் செய்து வந்தால் பின் மாற்றுவேன் யான்பிரம்மன் இடத்தில்முறையிட்டும் கூட

சித்தர்கள் ஆட்சி - 26 : நிலையானது இறைவன் அருளே. மற்றவை எல்லாம் நிலை அற்றது.


 

6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு.

நிலையானது இறைவன் அருளேமற்றவை எல்லாம் நிலை அற்றதுஆனால் முட்டாள் மனிதன்நிலையற்றதையே தேடிக்கொண்டு இருக்கின்றான்நிலை ல்லாத்தை தேடிப்போனால் மோசம்போய்விடுவான் மனிதன்ஆனாலும் நல்முறைகளாக அனைத்தும் நீயே ( இறைவா ) என்று கூறிவிடுஅதுவும் நன்முறையாகவே நடக்கும்அப்பனே அனைத்தும் எந்தன் இல்லை , இறைவாஉன்னிடத்திலேயே ஒப்படைத்து விடுகின்றேன் என்று ஒரு நிலையை யோசித்தால் பின் இறைவன்பாரத்துக்கொள்வான்ஆனாலும் ஒருவன் கூட அவைபோல் நினைப்பதும் இல்லைஇதுவரை யான் பார்ததும் இல்லை


ல்முறைகளாக பிறருக்காக வாழவேண்டும் என்ற கொள்கையைபிடித்தால் ந்தனுக்காக இறைவன் வாழ்வான்அதை விட்டு விட்டு தான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று என்னினால் இது நிச்சயம் முடியாது என்பேன்

சித்தர்கள் ஆட்சி - 25 : கர்மங்களும் கரையும் ரகசியம் - மதுரை பசுமலை அகத்திய மகரிஷி ஆலயத்தில்...


 

6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு.

நினைத்த காரியத்தை நினைத்தபடியே நல்முறைகளாக சொல்லுகின்றேன்ப்பொழுது பக்கத்தில்ஒரு மரம் இருக்கின்றதே அதை 108 முறை சுற்றி நல்முறைகளாக அன்னத்தை 30 பேர்களுக்குஅன்னதானம் இவை இட்டு வந்தாலே தன் கர்மங்களும் கரையும் ன்பேன்நான் இங்கு இருக்கும்போது நாள் பார்க்க தேவை இல்லை


நாள் ஏதும் பார்க்காமல்இந்த ஆலயத்தில் உள்ள வேப்ப மரத்தை 108 முறை சுற்றி வந்து, 30 நபர்களுக்கு அன்னதானம் அளித்தால் கர்மவினைகள் கரையும் எனபது அகத்திய மஹரிஷி வாக்கு. )


நல்முறைகளாக புரிந்து கொள்ளுங்கள்ஆனாலும் ஓர் நாள் சுற்றிவிட்டு நடைபெறவில்லை என்றுஎன்னக்கூடாது என்பேன்



சித்தர்கள் ஆட்சி - 24 : தெய்வ உதவி கிடைக்கும் ரகசியம் - மதுரை பசுமலை அகத்திய மகரிஷி ஆலயத்தில்...

 



6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு.

இன்னும் ஒரு சூட்சுமத்தை நல்முறைகளாக உரைக்கின்றேன். மாற்றத்தை யான் ஏற்ப்படுத்தியே தீர்வேன். சில சில வினைகளால் மனிதர்களுக்கு விமோச்சனம் இல்லாமலே போய்க்கொண்டே இருக்கின்றது. இங்கு வருபவர்கள் அரை மணி நேரம் நல்முறைகளாக தவத்தை மேறக்கொண்டு அவரவர் விருப்பப்படி நல்முறைகளாக பின் தெய்வங்களை எண்ணினால் நிச்சயம் கைகொடுப்பான் என்பேன். அனைத்து தெய்வங்களும் இங்கு வலம் வந்து கொண்டுதான் இருக்குன்றது என்பேன்.

சித்தர்கள் ஆட்சி - 23 : அதி சிறப்பு பெற - மதுரை ஆலய சூட்சும ரகசியம்



6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு.

நல்முறைகளாக வினையை தீர்த்துக்கொள்ளலாம் என்பேன். கந்தனிடத்தில் இங்கு வந்து நல்முறைகளாக கந்தர் அனுபூதியும் , கந்த சஷ்டி கவசத்தையும் ஓதி வந்தால் அதி சிறப்பை பெறலாம் என்பேன். இவையன்றி இன்னும் மாற்றங்கள் உண்டு என்பேன். நிச்சயம் இவை அனைத்தையும் நல்முறைகளாக முடித்தால் போல் மீனாட்சி தாயே இங்கு வருவாள் என்பேன்.

 

Monday, December 27, 2021

சித்தர்கள் ஆட்சி - 22 : இறைவனை வணங்கும் சூட்சும ரகசியம்


 அப்பனே இறைவனே நீ என்று நீ என்று கூட இறைவனே அனைத்தும் உந்தனுக்கே தெரியும் என்றுபின் நல்முறைகளாக கேட்டு விட்டால் அனைத்தும் தருவான்ஆனாலும் அறியாத முட்டாள்கள் எதைஎதையோ கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள்


-  6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு. 

சித்தர்கள் ஆட்சி - 22 : ஜீவகாருண்யம்


 

நல்லவிதமாக வாழ்வதற்க்கு ஜீவகாருண்யம் என்பது அடிப்படை.

- அகத்திய மஹரிஷி வாக்கு



Sunday, December 26, 2021

சித்தர்கள் ஆட்சி - 21 : சித்தன் உருவாகும் ரகசியம்


நான் என்ற தனித்தன்மை இல்லாது ஒழிந்துபோன பிறகுதான் அங்கே சித்தன் முளைக்கின்றான் என்பதை புரிந்து கொள்.


- பொதிகை வேந்தன் வாக்கு


சித்தர்கள் ஆட்சி - 20 : பரிபூரண சரணாகதி

 



பரிபூரண சரணாகதி தத்துவத்தில் ஆழ்ந்துவிட்ட பிறகு சாஸ்த்திரங்களை அதிகம் கவனிக்கவேண்டாம்.


- பொதிகை வேந்தன் வாக்கு

சித்தர்கள் ஆட்சி - 19 : சித்தர்கள் காட்சி


பக்தியோடு ஒருவன் தன் இல்லத்தில் இருந்து வழிபட்டாலும் சித்தர்கள் அங்கே வந்து காட்சி தருவார்கள். இதறக்காக வனத்திறக்கு, மலைக்கு செல்லவேண்டும் எனபதல்ல.

- பொதிகை வேந்தன் வாக்கு


 

சித்தர்கள் ஆட்சி - 18 : முக்தி


நன்றாக கவனிக்க வேண்டும்.எதையும் “நான் செய்கின்றேன்” என்ற என்ற உணர்வு ஒரு மனிதனுக்கு இருக்கும்வரை முக்தி கிட்டாது. என்னை கருவியாக வைத்துக்கொண்டு இறைவன் ஏதோ செயல்படுத்துகிறார் என்ற எண்ணி “இறைவா அனைத்தும் உன் செயலே” என்று எண்ணவேன்டும்.

- பொதிகை வேந்தன் வாக்கு


 

சித்தர்கள் ஆட்சி - 17 : இறைவனை வணங்குகின்ற நாள் எல்லாம் நல்ல நாள்தான்



இறைவன் கருணையால் எல்லா தினமும் உயர்ந்த தினம்தான். சத்தியமும் அறமும் கடைபிடிக்கின்ற மனிதனுக்கு இறைவனை வணங்குகின்ற நாள் எல்லாம் நல்ல நாள்தான்.

- பொதிகை வேந்தன் வாக்கு




 

Saturday, December 25, 2021

சித்தர்கள் ஆட்சி - 16 : அன்னதானம் = எம்பெருமான் ஈசன் காட்சி


அகத்திய மஹரிஷி பாதம் காப்பு

எம்பெருமான் ஈசன் காட்சி 5 ஸ்டார் உணவகத்தில் யாருக்கும் கிட்டியதாக சரித்திரமே இல்லை. எம்பெருமான் ஈசன் தருசன காட்சி ஏழை எளியவர்களின் மன மகிழ்ச்சியில் ( அன்னதானத்தில்தான்) நிறைய பேருக்கு கிட்டியது. இது வரலாறு. ஏழையின் சிரிப்பில் இறைவனை கானலாம்.

அன்னதானம் கர்மாக்களை நீக்க சிறந்த வழி. மிக முக்கியமாக சமுதாயத்தில் மிக மிக கீழ் நிலையில் உள்ளவர்களை அரசனாக ( ஈசன் ) பாவித்து நம்மை கீழ் நிலையில் வைத்து பயம் கலந்த அன்புடன் அன்னதானம் செய்ய மிகப்பெரிய தவபலம் கிட்டும். எம்பெருமான் ஈசன் காட்சி கிட்டும்.

அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக

 

Friday, December 24, 2021

Thursday, December 23, 2021

சித்தர்கள் ஆட்சி - 14 : கர்மாக்கள் விலக வேண்டும் என்றால்...



அகத்திய மஹரிஷி நாடி வாக்கு. இடம்:- ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம், திருவண்ணாமலை

எது எதறக்கோ செலவு செய்யும் போது இதற்க்கும் ( அன்னதானம் ) செய்யலாமே. அப்பனே நலமாக சிறப்புக்கள். கர்மாக்கள் விலக வேண்டும் என்றால் நிச்சயம் அன்னதானத்நை மேற்க்கோள் காட்டி அனைத்து விதத்திலும் செய்ய செய்ய அப்பனே யாங்களே வந்து வாங்குவோம் என்போம். இதனால் தான் அப்பனே கர்மங்கள் தொலையும் என்பது விதியப்பா.



 

சித்தர்கள் ஆட்சி - 13 : இறைவனிடம் எப்படி வேண்ட வேண்டும்?


அகத்திய மஹரிஷி பாதம் காப்பு


அகத்திய மஹரிஷி பொது நாடி வாக்கு:
வாசிக்கப்பட்ட இறை தலம் :- மதுரை பசுமலையில் சக்தி மாரியம்மன் தளத்தில் அமைந்துள்ள அன்னை லோபாமுத்திரை உடன் உறை அகத்திய மஹரிஷி ஆலயம்
நாடி அருளாளர்:- திரு.ஜானகிராமன் ஐயா அவர்கள்.

6-September-2021, திங்கள் கிழமை

அகத்திய மஹரிஷி : அப்பனே இன்னும் என்னென்ன தேவை கூறு உந்தனுக்கு.

( இங்கு நாடி அருளாளர் எவை வேண்டும் என்று அந்த வாக்கு கேட்ப்பரிடம கேட்க்க அதற்க்கு அவர் எல்லோரும் நல்லா இருக்கனும் என்று கேட்க்க உடனே பின்வருமாறு உரைத்தார் மகத்தான அகத்திய மஹரிஷி)

அகத்திய மஹரிஷி : அப்பனே இவை என்றுகூற இதைத்தான் கேட்க வேண்டுமே தவிர தன்பிள்ளைகள் , தன் இல்லங்கள், தன் சொந்த பந்தங்கள் இவை எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் பின் கேட்க்க்கூடாது என்பேன். அவ்வாறு கேட்டாலும் இறைவன் செய்ய மாட்டான். அப்பனே இறைவனே நீ என்று நீ என்று கூட இறைவனே அனைத்தும் உந்தனுக்கே தெரியும் என்று பின் நல்முறைகளாக கேட்டு விட்டால் அனைத்தும் தருவான். ஆனாலும் அறியாத முட்டாள்கள் எதை எதையோ கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

 ===============================================================

சித்தர்கள் ஆட்சி - 12 : அனைத்தும் இறைவன் கொடுப்பான்



அகத்திய மஹரிஷி பொது நாடி வாக்கு:
வாசிக்கப்பட்ட இறை தலம் :- மதுரை பசுமலையில் சக்தி மாரியம்மன் தளத்தில் அமைந்துள்ள அன்னை லோபாமுத்திரை உடன் உறை அகத்திய மஹரிஷி ஆலயம்
நாடி அருளாளர்:- திரு.ஜானகிராமன் ஐயா அவர்கள்.

6-September-2021, திங்கள் கிழமை


ஒழுக்கம் நல்முறைகளாக இருந்து விட்டால் அவனிடம் நற்ப்பண்புகள் பெருகும். பெருகும் அவனிடத்தில் ஆசைகள் இருக்காது என்பேன். இதனால் அன்புடன் இறைவனை வணங்குவான். அனைத்தும் இறைவன் கொடுப்பான் என்பேன்.

 

சித்தர்கள் ஆட்சி - 11 : ஒழுக்கம் இல்லை என்றால் அப்பனே எது வந்தாலும் நிறக்காது


அகத்திய மஹரிஷி பொது நாடி வாக்கு:

வாசிக்கப்பட்ட இறை தலம் :- மதுரை பசுமலையில் சக்தி மாரியம்மன் தளத்தில் அமைந்துள்ள அன்னை லோபாமுத்திரை உடன் உறை அகத்திய மஹரிஷி ஆலயம்
நாடி அருளாளர்:- திரு.ஜானகிராமன் ஐயா அவர்கள்.

6-September-2021, திங்கள் கிழமை


நல்முறைகளாகவே அன்போடு அகத்தியா நல்முறையாய் முருகா பின் ஈசா என்றெல்லாம் வணங்கி வந்தாலே அவன்தனை பின் பெயர் வைத்து அழைத்தாலே ஓடோடி வந்து விடுவான். ஆனால் அதற்க்கு தகுந்தாற்போல் மனிதர்கள் ஒழுக்கச்சீலர்களாக வாழ வேண்டும் என்பேன். 

ஒழுக்கம் நல் முறைகளாக இருந்துவிட்டால் அவனைத்தன் தேடி அனைத்தும் வந்துவிடும். ஒழுக்கம் இல்லை என்றால் அப்பனே எது வந்தாலும் நிறக்காது என்பேன். 


 

சித்தர்கள் ஆட்சி - 10 : இறைவன் நினைத்தால்தான் அனைத்தும் நடக்கும்


அகத்திய மஹரிஷி பாதம் காப்பு

அகத்திய மஹரிஷி பொது நாடி வாக்கு:
வாசிக்கப்பட்ட இறை தலம் :- மதுரை பசுமலையில் சக்தி மாரியம்மன் தளத்தில் அமைந்துள்ள அன்னை லோபாமுத்திரை உடன் உறை அகத்திய மஹரிஷி ஆலயம்
நாடி அருளாளர்:- திரு.ஜானகிராமன் ஐயா அவர்கள்.
6-September-2021, திங்கள் கிழமை

எவையும் கேட்கப்பட தேவையில்லை என்பேன். அன்பை மட்டும் செலுத்துங்கள். அன்பை மட்டும் செலுத்துங்கள்.இதுவே போதுமானது. எதையும் எவைஎன்றும் எதனைஎன்றும் மனிதனால் பெற முடியாது என்பேன். இறைவன் நினைத்தால்தான் அனைத்தும் நடக்கும் என்பேன்.

 

சித்தர்கள் ஆட்சி - 9 : இறை அருளே மிகப்பெரியது.


அகத்திய மஹரிஷி பாதம் காப்பு


அகத்திய மஹரிஷி பொது நாடி வாக்கு:
வாசிக்கப்பட்ட இறை தலம் :- மதுரை பசுமலையில் சக்தி மாரியம்மன் தளத்தில் அமைந்துள்ள அன்னை லோபாமுத்திரை உடன் உறை அகத்திய மஹரிஷி ஆலயம்
நாடி அருளாளர்:- திரு.ஜானகிராமன் ஐயா அவர்கள்.

6-September-2021, திங்கள் கிழமை


இவ்வுலகில் எதுவும் பெரிதில்லை அப்பா. இறை அருளே மிகப்பெரியது. அவ்விறையருளை பெற்று விட்டால் அனைத்தும் இறைவனே தருவான் என்பேன்.
 

சித்தர்கள் ஆட்சி - 8 : அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம்


அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம்

அகத்திய மஹரிஷி பாதம் காப்பு

மதுரை - பசுமலை - தியாகராசர் குடியிருப்பில் உள்ள ஶ்ரீசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அன்னை லோபமுத்ரிரா சமேத மகரிஷி அகத்தியர் சன்னதியில்

இன்று வியாழக்கிழமை 23/12/2021 காலை 10:30 மணிக்கு மார்கழி மாத ஆயில்யபூசையும் சிறப்பு அபிஷேகங்கள் அதை தொடர்ந்து அன்னதானமும்  சிறப்பாக நடைபெற்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக

 

Wednesday, December 22, 2021

சித்தர்கள் ஆட்சி - 7 : என்னை நம்பியவர்களை யான் எப்பொழுதும் ஒருபோதும் கைவிட்டதாக சரித்திரமே இல்லை


அகத்திய மஹரிஷி வாக்கு 21.12.2021

அப்பனே நல்விதமாக என்னையே நம்பிவிட்டாய்.என்னை நம்பியவர்களை யான் எப்பொழுதும் ஒருபோதும் கைவிட்டதாக சரித்திரமே இல்லை என்பேன் அப்பனே. கட்டங்கள் வரும் மனிதனாக பிறந்து விட்டால்.ஏன் அப்பனே இறைவனே பின் இவ்வுலகத்தில் பிறந்து விட்டால் இறைவனுக்கே கட்டம் என்றபோது மனிதனை நினைத்துக்கொள். அப்பனே ஆனாலும் உன் அருகில் யான் இருக்கின்ற போது நலமே விளையும் என்பேன்.


 

Tuesday, December 21, 2021

சித்தர்கள் ஆட்சி - 6 : திருவாசகம்

 



அகத்திய மஹரிஷி பாதம் காப்பு


கலி / கலி புருஷன் நம் கண்ணுக்கு தெரியா நிரந்தர (Covid) கொரோனா. நமக்கு தெரியாமலேயே பாதிப்புக்கள் அதிகம்.

அதை அழிக்க ஒரே வழி திருவாசகம் ஒவ்வொரு இல்லத்திலும் ஓதுதல் அவசியம். ஒவ்வொரு இல்லத்திலும் மன நிறைவு, மகிழ்ச்சி எப்போதும் நிலைக்க திருவாசகம் ஒதுதல் அதி மிக அவசியம். உங்கள் இல்லத்தில் சிவன் அடியவர்களை அழைத்து அவர்களை கொரவித்து , ஈசனாக பாவித்து அன்னம் அளித்து வர, இறைவன் அருளால் மிக்க நலம் விழையும்.

இது தொடர்பாக இறை , குரு நாதர் நாடி வாக்குகள் நமது ஆழ் சிந்தனைக்கு இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏

நன்றி: - சித்தன் அருள் வலைதளம் , நாடி அருளாளர்  திரு.ஜானகிராமன் அய்யா  அவர்கள்.

=========================================================


20/10/21  பௌர்ணமி அன்று  ஆதி சித்தன் சிவன் உரைத்த பொதுவாக்கு. இடம்: கங்கைகரை காசி.

யானே என்பதற்கிணங்க யான் எழுதிய சிவ புராணத்தையும் ஓதுக.ஓதுக! ஓதுக! ஓதிக்கொண்டே இருக.

=========================================================

11/11/2021 அன்று கந்தன் ஜீவநாடியில் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம். மாதேஸ்வரன் மலை கர்நாடகா.

என் தந்தை ஈசனே திருவாசகத்தை எழுதினான் எழுதினான் என்பதற்கிணங்க அனைத்து விஷயங்களும் அதிலேயே அடங்கி உள்ளது.அது ( திருவாசகம் )  பெரும் பொக்கிஷம் ஆனாலும் அதனை கூட உணராமல் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்.

=========================================================

14/12/2021 அன்று  ஏகாதசி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.

அனுதினமும் பின் திருவாசகத்தை  இல்லம் அதில் பின் அனைத்து சிவனடியார்களையும் அழைத்து வந்து ஓதுதல் வேண்டும். இவ்வாறு ஓதுதல் வேண்டும் என்பதே உறுதியானது. இவ்வாறு பின் ஓதி வந்தால் கலிபுருஷனும் ஈசனுக்கு பயப்பட்டு பின் ஒதுங்கி விடுவான் என்பது மெய்யே.

- அகத்திய மஹரிஷி

=========================================================



Monday, December 20, 2021

சித்தர்கள் ஆட்சி - 5

 


அகத்திய மஹரிஷி பாதம் காப்பு

குரு நாதர் அகத்திய மஹரிஷி , அன்னை உலோபாமுத்திரை இருவரையும் இனைந்து புகழ் பாடும் பாடல் ஒன்றை பார்ப்போம்.

உமை நிகர் ஒருத்தி உள்ளாள்
      உலோபாமுத்திரையே யன்னாள்

நமை நிகர் ஒருத்தன் உள்ளான்
       நலத்தமிழ் முனியே யன்னான்

இமையவர் அறமின் என்ன
      எந்தையே அருளிச் செய்யக்

கமைமிகு தவம்பேறுற்றார்
       கழலிணைக் கன்பு செயவாராம்.

        ⁃மண்ணிப்படிக்கரைப் புராணம்


இந்த உலகில் உமைக்கு, அம்பிகை சிவகாமி சுந்தரிக்கு நிகராக ஒருத்தி உள்ளாள் என்றால் அது உலோபாமுத்திரையே.எமக்கு ( சிவபெருமான் ) நிகரானவர் ஒருவர் தமிழ் மொழிக்கு மூலமான தமிழ் முனிவர் அகத்திய மஹரிஷியே ஆவார்.

இப்படி சிவபெருமானின் மூலம் இந்திராதி தேவர்களுக்கு அருளிய அருள் வாசகத்தின் படி , சிவபெருமானே எனக்கு நிகரானவர் என்று போற்றப்பட்டுவர்  என்றால்
நமது குருநாதர் தமிழ் முனிவர் பொதிகை வேந்தன் அகத்திய மாமுனி பெருமை விவரிக்க இயலா.

🙏*குருவடி சரணம்*🙏
🙏*குரு பாதுகை சரணம்*🙏


அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக

சித்தர்கள் ஆட்சி - 4


நிலையானது இறைவன் மட்டுமே.மற்றவை எல்லாம் நிலையற்றது.ஆனால் முட்டாள் மனிதன் நிலையற்றதையே தேடிக்கொண்டு இருக்கின்றான்.

- மதுரை பசுமலையில் அமைந்துள்ள அகத்திய மஹரிஷி ஆலயத்தில் வாசிக்கப்பட்ட அகத்திய மஹரிஷி நாடி வாக்கு.


 

அகத்திய மகரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம்

 


ஸ்ரீ சக்தி மாரியம்மன்


அன்னை லோபாமுத்திரை சமேத அகத்திய மகரிஷி


அகத்திய ரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம்

அகத்திய மஹரிஷி பாதம் காப்பு

மதுரை - பசுமலை - (மூலக்கரை / மன்னர் கல்லூரி பேருந்து நிறுத்தம்) தியாகராசர் குடியிருப்பில் உள்ள ஶ்ரீசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அன்னை லோபமுத்ரிரா சமேத மகரிஷி அகத்தியர் சன்னதியில்

வரும் வியாழக்கிழமை 23/12/2021 காலை 10:30 மணிக்கு மார்கழி மாத ஆயில்யபூசையும் சிறப்பு அபிஷேகங்கள் அதை தொடர்ந்து அன்னதானமும் சிறப்பாக நடைபெற உள்ளது என்ற விவரங்களை தாங்கள் அறிய தருகிறோம்.


அடியவர்கள் அனைவரும் இந்த பூசைக்கு வந்திருந்து குரு மகரிஷி அகத்தியர் - அன்னை லோபமுத்திரா அருளும் ஆசியும் பெற வருக என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

அகத்திய மரிஷி புகழ் ஓங்குக!