“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, February 28, 2025

சித்தர்கள் ஆட்சி - 436:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 3

 

 இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்



அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 3


(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்

1. சித்தர்கள் ஆட்சி - 431 - பகுதி 1

2. சித்தர்கள் ஆட்சி - 434 - பகுதி 2 

)

நம் குருநாதர் :- அப்பனே கவலைகள் இல்லை. அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். ஒவ்வொரு இடத்திலும் உங்களைப் பார்த்துள்ளேன் நலமாகவே. ஆனாலும் சில வெற்றி, தோல்விகள். கவலைகள் இல்லை. 


வெற்றி, தோல்வி அறிந்தும் கூட 

சூரியன் , சந்திரன்

இரவு பின் பகல்

இன்பம் , துன்பம்

மாறி மாறித்தான் வரும் என்பேன். நிச்சயம் ஒன்று சொன்னேன் பல வழிகளிலும் கூட. இதனால் துன்பமே வந்திருந்தாலும், இன்பமே வந்திருந்தாலும் நிச்சயம் இன்பமாகவே இறைவன் படைத்திருந்தாலும் நீங்கள் நிச்சயம் இன்பமாகவே வாழ்ந்திட்டு , இறைவன் என்ற பெயரையே மறந்து விடுவீர்கள். அதனால்தான் இறைவன் துன்பம் என்று வைத்திருக்கின்றான். அதனால் நிச்சயம் துன்பம் வந்தே சேரும். துன்பம் வந்தால்தான், இறைவனிடத்தில் ஐயோ!!! ஓடோடி  இறைவா!!! இறைவா!!!! என்னை காப்பாற்று காப்பாற்று என்று ஓடோடி வருவீர்கள். இன்பமாகவே இருந்தால் , இறைவனா??? எங்கிருக்கின்றான்??. யான்தான் இறைவன் என்று மனிதன் சொல்லிவிட்டு சென்று கொண்டே இருப்பான். 


அடியவர்கள் :- ( காற்றின் ஓசை கூட கேட்காத அளவு அமைதி ) 


குருநாதர் :- அப்பனே சொல். துன்பம் வருவது நல்லதா? பின் இன்பம் வருவது நல்லதா? 


அடியவர் 4 :- இரண்டும் கலந்து வந்தால்தான் வாழ்க்கை சுவையாக இருக்கும் என்று தானே சொல்ல வருகின்றீர்கள் சாமி!! 


குருநாதர் :- அப்பனே எப்படி சுவையாக இருக்கும்?


அடியவர் 4 :- பக்குவம் ஆகி, அதுக்கு அப்புறம் நல்லது நடக்கும்போது, கெட்டியாக காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றீர்கள் சாமி.


குருநாதர் :- அப்பனே (இதை) அனைவருக்கும் சொல்லி எடுத்து உரை. 


அடியவர் 4 :- ( அப்படியே எடுத்து உரைத்தார் அங்கு உள்ள அடியவர்களுக்கு ) வாழ்க்கையில இன்பம் துன்பம் இரண்டும் இருக்கும். துன்பம் வந்தால்தான், பக்குவம் வரும். பக்குவம் வந்தால்தான் அதை கட்டி காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று அவர் சொல்லவருகின்றார். 


குருநாதர் :- அப்பனே புரியும் என்பது என்ன? புரியாது என்பது என்ன? 


அடியவர் 4:- நீங்க சொல்ரது புரியல சாமி. 


குருநாதர் :- அப்பனே அறியும் என்பது, அறியாது என்பது (என்ன)?


அடியவர் 4:- தாங்களே கூறிவிட்டால் சௌகரியமாக இருக்கும்…


அடியவர்கள் :- ( சிரிப்பு ) 


குருநாதர் :- அப்பனே அனைத்தும் கூறுகின்றேன் அப்பனே. உணவைக்கூட உன் பக்கத்திலேயே வைக்கின்றேன். நீ உண்ணாதே. யான் ஊட்டி விடுகின்றேன். 


அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு )


அடியவர் 4 :- அது உங்கள் கருணை சாமி.


குருநாதர் :- அப்பனே அறிந்தும்கூட இவ்வளவு கருணை படைத்தவன் உங்களுக்கு நல்லது செய்ய மாட்டானா என்ன? கூறுங்கள் நீங்களே அப்பனே. 


அடியவர் 4:- கண்டிப்பாக சாமி ( எங்களுக்கு நல்லது செய்வீர்கள் )


குருநாதர் :- அப்பொழுது என்னைக் கேட்க வேண்டுமா அப்பனே? உங்கள் மனதில் என்னென்ன உள்ளது என்பதை எல்லாம் யான் அறியாததா? பின் எடுத்து வந்துவிட்டேன் அப்பனே. இதுபோலத்தான் அகத்தியன் அப்பனே. எப்படி, யாரை, எப்படி கொண்டு வர வேண்டும்? எங்கு வைக்க வேண்டும்? எப்படி உரைக்க வேண்டும் என்பதை எல்லாம் தெரியும் அப்பா. அப்பனே உன் வாயாலே வந்து விட்டது. கருணை படைத்தவன்தான் ( இவ் அகத்தியன் ). அனைத்து சித்தர்களும் மக்களுக்கு நன்மை செய்ய காத்துக்கொண்டுள்ளார்கள். ஆனால் மக்களோ , மாயையில் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். பின் அழகாகச் செப்பினால் ஆனால் சொல்வதில்லையே? அப்பொழுது என்ன செய்யலாம் மகனே? 


அடியவர் 4:- சாமி நீங்கதான் அணுவுக்கு அணுவாக இருக்கின்றீர்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- (குருநாதர் சொல்வது )நான் கருணை உள்ளவன் தான். ஆனால் குழந்தைகள் போல் சொல்கின்றேன். ஆனால் கேட்பதில்லை. அப்போது என்ன செய்யலாம் என்று கேட்கின்றார்.


அடியவர் 4:- சாமி எல்லோருக்கும் அசரீரியாக பேசினீங்க என்றால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கும். 


அடியவர்கள் :- ( சிரிப்பு )


அடியவர் 5 :- அடித்துச் சொல்லுங்கள் (குருநாதா). 


குருநாதர் :- ( யாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை.) அதனால்தான் என் பக்தர்கள் ஆயினும் அடித்து நொறுக்குகின்றேன் அப்பனே. கஷ்டத்தை அள்ளித் தந்துகொண்டே இருக்கின்றேன். 

(நல் வழிப்படுத்துகின்றேன்)

பின் சரியா, தவறா? 


அடியவர் 4 :- நீங்கள் செய்தால் சரிதான் சாமி.


குருநாதர் :- அப்பனே அனைவரிடத்திலும் கூறு. அகத்தியன் எதைச் செய்தாலும் நன்மைக்கே என்று அனைவருக்கும் தெரிவி. 


அடியவர் :- அகத்தியர் (பெருமான்) எதைச் செய்தாலும் நல்லதற்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள். 


குருநாதர் :- ஒத்துக் கொள்கின்றீர்களா என்று கேள்?


அடியவர் 4 :- ஒத்துக்கொள்கின்றீர்களா? 


அடியவர்கள் :- ( ஒரு மித்த குரலில் ) ஒத்துக்கொள்கின்றோம் ஐயா. 


குருநாதர் :- அப்பனே நிச்சயம் ஒரு குழந்தை தன் தந்தையை, தன் தாயை நம்பிக்கொண்டிருக்கின்றது. தாய், தந்தையும் நன்மை செய்யாமல் விட்டுவிடுவார்களா என்ன? 


அடியவர் 4 :- விடமாட்டாங்க சாமி. 


குருநாதர் :- அதே போலத்தான் அப்பனே. எனை நம்பி வந்துவிட்டீர்கள் ஓடோடி அப்பனே. யான் உங்களைக் கை விடுவேனா என்ன? அப்பனே நிச்சயம் விதியில் உள்ளதையே மாற்றித் தருவேன் அப்பனே. ஆனால் அதற்கு நீங்கள் பக்குவங்களாக, பக்குவங்கள் பட வேண்டும் என்பதே இவ்வாறெல்லாம் வாக்குகள் கூறி , எடுத்துரைத்து , பக்குவங்கள் பெற பின் நன்மைகள். அதாவது தர்மத்தைக் காக்கவேண்டும். தர்மத்தைக் காக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நிச்சயம் என் பிள்ளைகள் ஆகிவிட்டீர்கள். அதனால் தர்மத்தைக் காக்கப்பட வேண்டும். தர்மத்தை நிச்சயம் கடைப்பிடித்தால் நிச்சயம் யான் வந்து உந்தனுக்கு அதாவது கதையோடு கட்டிப்பிடித்து பின் பிள்ளையே என்று அனைத்தும் செய்து விடுவேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( நல் விளக்கங்கள் ) 


அடியவர் 4 :- தர்மத்தை ( நீங்கள் ) கடைப்பிடித்தீர்கள் என்றால் , (சாமி) அவரே வீட்டுக்கு வந்து கட்டிப்பிடித்துக்கொள்கின்றேன் என்று சொல்கின்றார். 


குருநாதர் :- அப்பனே பல வினைகளையும் நீக்குவேன். அப்பனே இவ்வுடம்பு பாவத்தால் சூழப்பட்டுள்ளது அப்பா. புண்ணியம் குறைவே. 


இதனால் பின் பாவத்தால் சூழப்பட்டதற்கு நிச்சயம் பல வருத்தங்கள், பல தொந்தரவுகள் வந்தே தீரும். ஆனாலும் கவலை விடுங்கள். இவ் அகத்தியனை நம்பி வந்து விட்டீர்கள். நல்லதே செய்வேன் உண்மைதனைக் கூட. பல வகையிலும் கூட சிறு வயதிலிருந்தே பக்திகள் கடைப்பிடிக்க வேண்டும். பின் ஒழுக்கமாக வாழ வேண்டும். நல் முறையாகவே நல் எண்ணங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். நிச்சயம் அனைவருமே (நம்) சொந்தங்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். இப்படி இருந்தால்தான் பின் சித்தனிடையே அறிந்தும் உண்மைதனைக்கூட. 


இதனால் போட்டி பொறாமைகள் , இன்னும் யான் பெரியவன் , நீ பெரியவன் என்றெல்லாம் போய்க்கொண்டிருந்தால் இறைவன் கூட,  நீதானப்பா பெரியவன். போய் சென்று கொண்டே இரு. எங்கே அப்பனே அடிபட்டு,  பின் மீண்டும் வருவானப்பா. இறைவன் எப்படியப்பா நல்லது செய்வான்? நீங்களே கூறுங்கள்.


சுவடி ஓதும் மைந்தன் :- ( நல் விளக்கங்கள் ) 


குருநாதர் :- அப்பனே அனைவருக்குமே ஒவ்வொரு குறைதானப்பா. குறையில்லாமல் மனிதன் யார் என்று கேள். உண்மைதனை இன்னும் விளக்குகின்றேன். 


அடியவர் 4 :- குறையில்லாதவர்கள் யார் ( என்று சொல்லுங்கள் அடியவர்களே). 


அடியவர்கள் :- ( ஒரு மித்த குரலில் ) எல்லோருக்கும் குறை உள்ளது ஐயா. 


குருநாதர் :- அப்பனே குறை இல்லாமல் யார் இருக்கின்றான் இவ்வுலகத்தில்?


அடியவர் 4 , அடியவர்கள் :- ( அப்படிக் குறை இல்லாமல் ) யாரும் இல்லே சாமி. 


குருநாதர் :- அப்பனே தெரிகின்றதா? அப்பொழுது குறை நீக்குபவன் யார்?


அடியவர் 4 :- தாங்கள் தான் சாமி. 

அடியவர்கள் :- இறைவன்


குருநாதர் :- அப்பனே இறைவன்தானப்பா. 


( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் உரைத்த சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Friday, February 21, 2025

சித்தர்கள் ஆட்சி - 434:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 2

 இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்






அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 2 ( கோளறு பதிகம் - ரகசியங்கள் ) 

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்

1. சித்தர்கள் ஆட்சி - 431 - கோவை வடவள்ளி வாக்கு 1

)


நம் குருநாதர் :- ( அங்கு ஒரு அடியவரை ) அம்மையே என்ன வேண்டும்?

அடியவர் 3 :- ஒன்றும் வேண்டாம் . அப்பாவோட அருள் எப்பவும் கிடைத்தால் போதும். 

நம் குருநாதர் :- அம்மையே அனைவரிடத்திலும் கேள் என்ற வேண்டும் என்று?

அடியவர் 3 :- உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும் என்று அப்பா கேட்கின்றார்.

அடியவர் 4 :- ( பின்னால் இருந்த படி ) நல்ல பக்தியும் , நல்ல முக்தியும் வேண்டும் என்று சொல்லுங்கள். 

நம் குருநாதர் :- அவனை எழச்சொல் முதலில். முன்னே வரச்சொல். 

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு அலைகள் ) தானாகவே போய் மாட்டிக்கிட்டார். 

அடியவர் 4 :- ( சுவடியின் முன்னே வந்தார் ) 


நம் குருநாதர் :- அப்பனே திரும்பி நின்று,  அவரவருக்கு என்ன வேண்டும் என்று நீயே கேள் அப்பனே. ஏனென்றால் புண்ணியம் பெருகட்டும் அப்பனே. அறிந்தும் கூட இன்னும் நல்லவை செய்ய வேண்டும் நீ. அதனால் பின் புண்ணியத்தை யானே தேடித்தருகின்றேன். நீ செய்ய மாட்டாய் என்பேன் அப்பனே. __ என்பேன் அப்பனே. அதனால் அனைவரிடத்திலும் கேள் என்ன வேண்டும் என்று. அதுவும் ஒரு புண்ணியம்தானப்பா. யான் சொல்கின்றேன். நீ அப்படியே சொல். புண்ணியம் ஆகும் அப்பனே. புண்ணியம் வளர்த்துக்கொள் அப்பனே. இல்லத்திலும், உன் தாய்க்கும் சந்தோசம் ஏற்படும் என்பேன் நலன்களாகவே. 

==============

(அடியவர்கள் ஒன்றை நன்கு இங்கு கவனிக்கவும். என்ன வேண்டும் என்று கேட்டாலே புண்ணியம் வரும் என்றால் , சித்தன் அருள் வலை தளத்தில் அன்புடன் அகத்தியர் வாக்குகளை மக்களுக்கு நேரில் எடுத்து உரைத்தால் எவ்வளவு புண்ணியம் உண்டாகும்? அதனால் உயிர் உடலில் இருக்கும் காலம்வரை இவ்வாக்குகளை இயன்ற பொழுதெல்லாம் இவ்வுலகம் முழுவதும் பரப்புங்கள்.) 

==================

அடியவர் 4 :- நிற்பவர்களுக்கு யார் யாருக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். 


அடியவர் 3 :- யார் யாருக்கு என்ன வேண்டும் என்று ( அகத்தியர் ஐயா ) அவருக்கே தெரியும். 


நம் குருநாதர் :- அப்பனே புரிகின்றதா?ஆனால் என்னிடத்தில் கேட்கின்றார்கள் ஏன் என்று கூறு?


அடியவர் 3:- இந்த ஜீவநாடி கேட்கவே நாங்கள் எத்தனை ஜென்மத்தில் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும். 


நம் குருநாதர் :- அமர்ந்திருப்பவர்கள் அனைவருமே புண்ணியவாதிகள்தான். ஆனால் அனைத்தும் நடக்கும். ஆனாலும் சிறு சிறு தவறு செய்கின்றீர்கள். அவ்வளவுதான். அதை திருத்திக்கொள்ளவே யான் வருகின்றேன். நலமாகவே அனைத்தும் சொல்கின்றேன். நிச்சயம் அதிகம் அதாவது தேர்ச்சி பெற வேண்டும் என்றால், ஆனால் சிறிய அளவிலே பின் தோல்வி அடைந்து விடுகின்றீர்கள். இதனால் அனைத்தும் நலமாக புண்ணியங்கள் மிகுந்து காணப்படுகின்றது. ஆனாலும் சிறிது சிறிது தவற்றினால்தான் நிச்சயம் எங்கேயோ போய் பள்ளத்தில் விழுந்து விடுகின்றீர்கள். அவ்பள்ளத்தில் நிச்சயம் விழாதீர்கள் என்பதற்காகவே இங்கு ஆசிகள் இப்பொழுது. 

( தனி வாக்குகள் ) 

…….

……..

பல போராட்டங்களை சந்திக்கும் பொழுதுதான் இறைவன் நேரில் காட்சி அளிக்கின்றான். 

………

……… 

தாயே , மற்றவர்களைப் பற்றி நாம் எப்பொழுது நினைக்கின்றோமோ நன்றாக இருக்க வேண்டும் என்று , நிச்சயம் இறைவன் தன்னைப் பற்றி ( நம்மைப் பற்றி ) நினைப்பான் தாயே!!!!!!!!

…….

……

( இறை வழிபாட்டில் இருப்பவர்கள் எப்படி பாவத்தை சேர்த்துக் கொள்கின்றார்கள்? ) 


( சுய , தன்னைப் பற்றி, தன் குடும்பம் பற்றி வேண்டுதல் ) இதுதான் மாயை. அதாவது இறைவனிடத்தில் தன் சுயநலத்திற்காக எதுவும் வேண்டக்கூடாது. அப்படி வேண்டினால் பாவங்கள் வந்து சேர்ந்துவிடும். கஷ்டங்கள் வந்து சேர்ந்துவிடும். நிச்சயம் சுய நலம் வேண்டாம். நிச்சயம் இறைவன் படைக்கின்றான் அனைவரையுமே. அறிந்தும் அறிந்தும் கூட இதனால் இறைவனுக்கு எப்பொழுது செய்யத் தெரியுமோ, பின் அப்பொழுது செய்வான் தாயே. கவலையை விடு. ஆசிகள் கொடுத்து விட்டான் என்று சொல்லிவிட்டேன். பின் செய்யாமலா போவான் இறைவன் ?


….

( நம் குருநாதர் இவ் தருணத்தில் உலகோர் நன்மைக்காக இவ் அடியவரை அதாவது இங்கு “அடியவர் 3” என்ற அடியவரை உரையாட வைத்து , மறைமுகமாக இயக்கி,  மகிமை புகழ் “கோளறு பதிகம்”

 ரகசியங்களை எடுத்தை உரைக்க ஆரம்பித்தார்கள். இதன் மூலம் இவ் அடியவர் புண்ணியமும் உயர குருநாதர்  முன்பு இவ்வாக்கில் உரைத்தருளினார் என்பதை அடியவர்கள் கருத்தில் கொள்க. பல வருடங்களாக ஈட்ட இயலாத புண்ணியங்கள், நம் குருநாதர் கருணையால் , சத்சங்கத்தில் சட்டென்று நடந்துவிடும் அதிசயம் இது. இனி கவனமுடன் படியுங்கள் இவ் ஆழ் ரகசியங்களை.) 

நம் குருநாதர் :- அப்பனே நீ கேள். எனக்காக வேண்டிக்கொள் என்று. 

அடியவர் 3 :- அம்மா , எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

நம் குருநாதர் :- அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் எப்படியப்பா வேண்டிக் கொள்வாள்? (அவள்) பெற்ற பிள்ளையா நீ?  

அடியவர் 3 :- அப்படி எல்லாம் ( இவ் அம்மை ) நினைக்க மாட்டார்கள் சாமி. ரொம்ப நாள் தெரிந்தவர்கள். 

நம் குருநாதர் :- அப்பனே யான் கூட பழகுகின்றேன் அப்பனே. ஆனால் பழகிக்கொண்டே இருக்கின்றாள். ஆனாலும் உந்தனுக்காக வேண்டிக்கொண்டாளா என்று கேள்?

அடியவர் 4 :- வேண்டிக்கொண்டேன் ஐயா.

நம் குருநாதர் :- அப்பனே யான் இல்லை என்று சொல்வேன் அப்பனே. இனி மேலாவது வேண்டிக்கொள்ளச் சொல் அப்பனே. நடந்தேறும் அப்பனே. ஒன்றைக் கொடுத்தால்தான் , ஒன்றை வாங்க முடியும் அப்பனே. 

அடியவர் 3 :- சரிங்க சாமி. 

நம் குருநாதர் :- அப்பனே , இன்னும் என்ன வேண்டும் என்று கேள்? 

அடியவர் 3 :- இன்னும் என்ன வேண்டும்?

அடியவர் 4 :- ஒன்றும் வேண்டாம்.

அடியவர் 5 :- அப்பா எங்க கூட இருந்தால் போதும். 


நம் குருநாதர் :- ( தனி வாக்குகள்  உரைத்து அருளினார் கருணைக் கடல் ) இன்னும் என்ன வேண்டும் என்று கேள்?

அடியவர் 3 :- சாமி , எல்லோருக்கும் பக்தியையும் , புத்தியும் கொடுத்துவிடுங்கள். 

நம் குருநாதர் :- ஏன் பக்தியைக் கேட்கின்றாய்? 

அடியவர் 3 :- பக்திதான் அன்பு,  சாமி.

நம் குருநாதர் :- அப்பனே, இது எவ்வாறப்பா நியாயம்? உன் வாயில் வருவதை எல்லாம் உளறுகின்றாய் அப்பனே. 

============

( அடியவர்கள் இங்கு நம் குருநாதர் கருணைக்கடல் இவ் அடியவரைத் தூண்டி, எப்படி எல்லாம் அவ் அடியவரின் மூலம் உலகிற்கு ஒரு மகத்தான ரகசியத்தை எடுத்துரைத்து , இவ் அடியவருக்கு புண்ணியத்தை உண்டாக்குகின்றார் என்று கவனிக்கவும். உயர் புண்ணியங்கள் குருநாதர், இறைவன் மனது வைத்தால்தான் நடக்கும் என்பதற்கு இவ் உரையாடல் மிகச் சிறந்த ஒரு உதாரணம். வாருங்கள் நம் அன்பு குருநாதரின் கருணை வாக்கு மழையில் நனையலாம் ) 

==============

அடியவர் 3 :- பக்தியும், புத்தியும் இருந்தால்தானே சுவாமி அனுக்கிரகம்…


நம் குருநாதர் :- அப்பனே , புத்திக்கும், பக்திக்கும் என்ன சிறப்பு?


அடியவர் 3 :- பெரியவங்க சொன்னாங்க சாமி. நல்லபடியாக இருப்போம் (என்று). 

நம் குருநாதர் :- அப்பனே, அப்பொழுது உந்தனுக்கு மூளையே இல்லையா? அறிவே இல்லையா? அப்பனே பெரியவர்கள் சொன்னால்தான்,  அறிந்தும் கூட அப்பொழுது அவர்கள் ஓடிவிடு என்று சொல்வார்கள். ஓடிவிடுவாயா என்ன அப்பனே? சொல் அப்பனே? 

அடியவர் 3 :- சான்றோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள் சாமி பக்தி செலுத்த வேண்டும் என்று…

நம் குருநாதர் :- அப்பனே பக்தி செலுத்து என்று சொல்கின்றார்கள் அப்பனே, ஆனால் செய்கின்றார்களா என்ன அப்பனே? ஆனால் காதல்தான் செய்கின்றார்கள். 

அடியவர்கள் :- ( மௌன சிரிப்புகள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- ( கருணைக்கடல் தூண்டியதோடு மட்டும் இல்லாமல் சுவடி ஓதும் மைந்தனும் அவ் அடியவரை ஊக்குவித்து உரையாடலைத் தொடர்ந்தார்கள். இதன் சுவாரசியத்தை முடிந்த அளவு அடியவர்களுக்கு பயன் பட, இங்கு நம் குருநாதர் கருணைக்கடல் அருளால் வாக்குகளாக மலர்ந்துள்ளது. ) 

நம் குருநாதர் :- அப்பனே இவர்கள் ஓரளவிற்குப் பக்தியில் தேர்ச்சி பெற்று விட்டார்கள் அப்பனே. அப்பனே அவர்களுக்கு அனைத்தும் நல்கும் என்று சொல் புண்ணியமாகட்டும் உந்தனுக்கு. 

=========

( நம் குருநாதரின் கருணையை இங்கு கவனியுங்கள். இவ் அடியவருக்கு எப்படி இறங்கி வந்து, கருணைக்கடல் புண்ணியத்தைக் மலை போலக் குவிக்கின்றார் என்று உணருங்கள்.) 

=========

அடியவர் 3 :- ( நம் குருநாதர் உரைத்தது போல்  அங்கு உள்ள அடியவர்களுக்கு உரைத்தார் இவ் அடியவர்.) 

அடியவர்கள் :- இதுவே போதும் சாமி. ( மன நிறைவு அடைந்தது  இவ் அடியவர்களுக்கு ) 

=========

(இப்போது மீண்டும் இவ் அடியவரை அன்புடன் இழுத்து , ஆட்கொண்டு மீண்டும் புண்ணியம் செய்ய வாக்கு அருளினார்கள்.)

=========

நம் குருநாதர் :- அறிந்தும் கூட அப்பொழுது நீ கேட்டிருக்க வேண்டும் அல்லவா? இவர்கள் இருவரும்தான் பக்தியில் தேர்ச்சி பெற்றார்களா என்று? இங்கு அனைவருமே இல்லையா என்று நீ ஏன் கேட்கவில்லை அப்பனே கூறு? 

அடியவர்கள் :- ( பல மௌன சிரிப்புகள் )

அடியவர் :- சாமி நிற்கின்றவர்களைத் தானே கேட்கச் சொன்னீர்கள்?

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் அகத்தியரிடம் கேட்க வேண்டும். 

அடியவர் :- அப்ப அவர்கள் மட்டும் தான் முக்தி பெற்றுள்ளார்களா சாமி? இவர்கள் எல்லாம் முக்தி பெறவில்லையா?

நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட யான் சொன்ன பிறகே சொல்கின்றாய் அப்பனே. எவ்வாறு அப்பா நியாயம் அப்பனே? 

அடியவர் 3 :- நீங்க ஞானி. நீங்க முக்காலமும் அறிந்தவர்கள். உங்களுக்குத் தெரியும் சாமி. 

நம் குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட அதை யான் சொன்னேனா? 

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

அடியவர் 3 :- எல்லோருக்கும் தெரியும் சாமி. 

நம் குருநாதர் :- அப்பனே என்ன தெரியும் கூறு அப்பனே அகத்தியனைப் பற்றி? அனைவருக்கும் உரை அப்படித் திரும்பி. 

( நம் குருநாதர் கருணைக் கடல்,  உயர் முதல் தரப் புண்ணியம் ஈட்ட மேலும் வழி வகுத்தார் இவ் அடியவருக்கு.) 

அடியவர் 3 :- ( சுவடி ஓதும் இடத்தில் அடியவர்களைப் பார்த்து திரும்பி உரைக்க ஆரம்பித்தார் ) அகத்தியப் பெருமான் நடக்கின்றது, நடக்கப் போவது, நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் நிவர்த்தி செய்து எல்லோருக்கும் புத்தியைக் கொடுப்பார். புத்தியையும் பக்தியையும் கொடுப்பார். 

நம் குருநாதர் :- அப்பனே முக்தி என்றால் என்ன? பக்தி என்றால் என்ன?

அடியவர் 3 :- தாங்களே சொல்லிவிடுங்கள் சாமி. 

நம் குருநாதர் :- அப்பனே நீ ஏதாவது எந்தனுக்குச் சொல்ல வேண்டும் அப்பனே. அப்பொழுதுதான் உந்தனுக்கு சொல்லுவேன்.

அடியவர் 3 :- ( அமைதி )

நம் குருநாதர் :- அப்பனே அப்படியே திரும்பி ஒரு பாடலைப் பாடு. 

=========

( திருஞானசம்பந்தர் பெருமான் உரைத்த மகிமை புகழ் கோளறு பதிகப் பாடலை பாட ஆரம்பித்தார் இவ் அடியவர். ஆனால் இவ் பாடலை பாட வைத்தது நம் குருநாதர். அடியவர்கள் இவ் பாடலில் முழு விளக்கத்தை பின் வரும் பதிவில் படித்து பொருள் உணர்க) 

https://siththarkalatchi.blogspot.com/2024/05/378.html?m=0

சித்தர்கள் ஆட்சி - 378 - திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய கோளறு பதிகம்.

=========


அடியவர் 3:- ( பின் வரும் பாடலை பாடினார் அடியவர்) 


வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்    

  மிகநல்ல வீணை தடவி    

மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்    

  உளமே புகுந்த அதனால்    

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி    

  சனிபாம்பி ரண்டு முடனே    

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல    

  அடியா ரவர்க்கு மிகவே.  


நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட இதை அனைவரையுமே சொல்லச் சொல் அப்பனே. நிச்சயம் கிரகங்கள் அண்டாதப்பா. சொல்லிவிடு. 


அடியவர் 3 :- எல்லோரும் இந்த பாடலை சொல்லுங்கள். கிரகங்கள் யாரையும் தொந்தரவு செய்யாது.


நம் குருநாதர் :- அப்பனே சொல்லிவிட்டேன் அனைவருக்குமே. எந்தனுக்கு சொல்லவில்லை, உந்தனுக்குச் சொல்லவில்லை , இப்படிச் சொல்லவில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. அப்பனே நிச்சயம் யான் சொல்லியவற்றைக் கேட்டால்தான் அடுத்த அளவில் கூட எடுத்துச் செல்ல முடியும் என்பேன் அப்பனே. அதனால் அப்பனே முதல் வகுப்பிலேயே தேர்ச்சி பெறவேண்டும். அப்பொழுது ஆசிரியன் என்னென்ன சொல்கின்றானோ அதை நிச்சயம் கேட்டு தேர்ச்சி பெற வேண்டும். அப்பனே அதே போலத்தான் அப்பனே. இப்பொழுது சொல்லிவிட்டேன். என்ன சொன்னேன் என்று அனைவரையும் கேள்?  அப்பனே சொல்லச் சொல் பார்ப்போம் அப்பனே. அதாவது உன் பக்கத்தில் இருக்கின்றானே, அவனை எழச்சொல்லி இதை செப்பச் சொல். 


அடியவர் 3 :- ( மற்றொரு அடியவருக்குச் சொல்லிக் கொடுத்து, அவரை இப் பதிகத்தை சொல்லச் சொன்னார். அவ் அடியவரால் சொல்ல இயலவில்லை.) 


நம் குருநாதர் :- அப்பனே அப்பொழுது  கிரகங்கள் இவன் தனை அமுக்கி விட்டது அப்பனே. எப்படியப்பா? முதலில் என்ன பிரச்சினை வரும் என்பதைக் கேள் அவனை. 


அடியவர் 3 :- முதல்ல என்ன பிரச்சினை வரும்?


அடிவர் :- ஐயாவுக்கு…


அடியவர் 3 :- உங்களுக்குத் தான் சாமி தெரியும். 


நம் குருநாதர் :- அப்பனே காதல் பிரச்சினை வரும். காதலைப் பற்றி நீயும் எடுத்துரை? 


அடியவர் 3 :- ( காதல் புரிவதில் உள்ள பிரச்சினைகளை எடுத்து உரைத்து , பெற்றோர்கள் மூலம் திருமணம் நடத்தல் நன்று என்று  அழகாக எடுத்து உரைத்தார்.) 


நம் குருநாதர் :- அப்பனே ( கோளறு பதிகம் ) இதை நிச்சயம் அவந்தனக்குச் சொல்லிக்கொடு.


அடியவர் 3:-  வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்    

அடியவர் :- வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் 



அடியவர் 3:-  மிகநல்ல வீணை தடவி    

அடியவர் :- மிகநல்ல வீணை தடவி    


அடியவர் 3:-  மாசறு திங்கள்

அடியவர் :- மாசறு திங்கள்


அடியவர் 3:-  கங்கை முடிமேலணிந்தென்

அடியவர் :- கங்கை முடிமேலணிந்தென்    


அடியவர் 3:-  உளமே புகுந்த அதனால்    

அடியவர் :- உளமே புகுந்த அதனால்    


அடியவர் 3:-  ஞாயிறு திங்கள் 

அடியவர் :- ஞாயிறு திங்கள் 


அடியவர் 3:-  செவவாய்  புதன்

அடியவர் :- செவவாய்  புதன்


அடியவர் 3:-  வியாழன் வெள்ளி

அடியவர் :- வியாழன் வெள்ளி


அடியவர் 3:-  சனிபாம்பி ரண்டு முடனே    

அடியவர் :- சனிபாம்பி ரண்டு முடனே    


அடியவர் 3:-  ஆசறு நல்லநல்ல

அடியவர் :- ஆசறு நல்லநல்ல  


அடியவர் 3:- அவைநல்ல நல்ல    

அடியவர் :- அவைநல்ல நல்ல    


  அடியவர் 3:- அடியாரவர்க்கு மிகவே.  

அடியவர் :- அடியாரவர்க்கு மிகவே.  



நம் குருநாதர் :- அப்பனே இதை நிச்சயம் 108 முறை செப்ப வேண்டும் அனைவருமே. இதை செப்பிட்டு , அப்பனே சிறு எறும்புகளுக்காவது தானம் செய்ய வேண்டும் அப்பனே. வெற்றி நிச்சயம் உண்டு அப்பனே. இதை செப்பி, அனைவரையும் செப்பச் சொல். 


அடியவர் 3:- ( இவ் பதிகத்தை அடியவர் ஆரம்பித்த உடன், அங்கிருந்த அடியவர்கள் ஒருமித்த குரலில் கருணைக்கடல் முன்னர் பாட ஆரம்பித்தனர். சத்சங்கமே ரம்யமான இனிய இசைக்களம் ஆனது அங்கு அடியவர்களின் இனிய பாடுதலால். அத்துடன் இவ் அடியவர் குருநாதர் உரைத்தவாறு அனைவரையும் 108 முறை இல்லத்தில் அவர்களை ஓதச் சொன்னார்கள். அத்துடன் ஜீவராசிகளுக்கு அன்னதானம் இடவும் சொன்னார்.) 


நம் குருநாதர் :- அப்பனே, சொல்லிவிட்டேன் அப்பனே. இதில் யார் தேர்ச்சி பெறுகின்றார்களோ , அப்பொழுதுதான் அப்பனே அவந்தனக்கு மறு வாக்கு சொல்லி, உண்மை சொல்லி உயர்த்தி விடுவேன். 


அடியவர் 3:- ( அவ்வாரே உரைத்தார் அனைவருக்கும் )


அடியவர்கள் :- அந்த 4 வரியை மட்டும் பாட வேண்டுமா? அல்லது முழுப் பாடலையும் பாட வேண்டுமா? 


=========

கேளறு பதிகம் 11 பாடல்கள் அடங்கிய தொகுப்பு. அடியவர்கள் இவ் பாடலில் முழு விளக்கத்தை பின் வரும் பதிவில் படித்து பொருள் உணர்க. 

https://siththarkalatchi.blogspot.com/2024/05/378.html?m=0 

===============


நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட சாதமும், அப்பனே கூறு தனித்தனியாக வைத்து உண்ணலாமா என்று? 


அடியவர் 3 :- ( புரிந்து கொண்டார் ) கோளறு பதிகம் எல்லாமே படிக்க வேண்டும் 108 முறை.


நம் குருநாதர் :- அப்பனே இப்பொழுது சொல். குடும்பத்தில் சிக்கல் ஏற்படாது இவ்வாறு ஓதினால் என்று.


அடியவர் 3:- கோளறு பதிகம் முழுமையாக படித்தால் குடும்பத்தில் சிக்கல் ஏற்படாது. 


நம் குருநாதர் :- அப்பனே கலியுகம் என்பேன் அப்பனே. கிரகங்களின் ஆட்டம் அப்பனே அதிக அளவில் நடைபெறும் என்பேன் அப்பனே. அப்பொழுது இல்லத்திலும் கூட குழப்பங்கள். ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள். தாய் தந்தையர் அதாவது சகோதர, சகோதரிகளுக்கு இடையே சண்டைகள் ஏற்படுவதும் கூட உறுதி என்பேன் அப்பனே. இதை சொல்லிக்கொண்டே வந்தால் , அதாவது இல்லத்தில் ஒருவராவது இதைச் சொல்ல வேண்டும். 


அடியவர் 3:- குடும்பத்தில் யாராவது ஒருத்தராவது சொல்லுங்க என்று சொல்கின்றார். 


அடியவர்கள் :- 108 தடவை தொடர்ச்சியாக 

சொல்ல வேண்டுமா?


நம் குருநாதர் :- அம்மையே காசுகள் வந்து கொண்டே வந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் வேண்டாம் என்று சொல்லுவாயா தாயே? 


சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, சொல்லிக்கொண்டே இருங்கள் daily 108 முறை. 


நம் குருநாதர் :- அம்மையே நிச்சயம் உனைப் பார்த்தே ஒன்று கேட்கின்றேன். கடும் முயற்சி எடுத்தால் வெற்றிகள் உண்டு. தாயே இதற்கு என்ன நீ கூறுகின்றாய்? 


அடியவர் 5:- கடும் முயற்சி எடுக்கனும் ஐயா.


நம் குருநாதர் :- அம்மையே உயர் பதவிகள் வகித்தாலும் கடும் முயற்சி நிச்சயம். அதாவது தற்பொழுதெல்லாம் வெளி நாடு செல்கின்றார்கள். அதற்கு நாய் போல் பாடு படுகின்றனர். ஆனால் சுலபமாக வாழ்வதற்கு இதைதன் மீண்டும் கேள்விகளாக கேட்டுக்கொண்டுள்ளீர்கள் தாயே. எவ்வாறு நியாயம்? 


சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் ) 


அடியவர்கள் :- ( ஒரே நாளில் 108 முறை சொல்வது குறித்து உரையாடல்கள் ) 


நம் குருநாதர் :- அம்மையே சொல்லிவிட்டால் நன்று. ஆனாலும் அம்மையே அனைவரிடத்திலும் பாவம் உள்ளது. ஈசன் விடுவானா என்பது சந்தேகமே!!!!!?????


சுவடி ஓதும் மைந்தன் :- கேள்விக்குறியை போட்டுவிட்டார்….


நம் குருநாதர் :- அப்பனே இதனால் கவலைகள் இல்லை. அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 


( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் உரைத்த சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Saturday, February 8, 2025

சித்தர்கள் ஆட்சி - 432:- அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் சன்னதி. பசுமலை. மதுரை. 5ஆம் ஆண்டு ஆலய வருஷாபிஷேகம். 10-02-2025 . திங்கள்கிழமை. காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள்

 


இறைவா அனைத்தும் நீயே 

வணக்கம் அடியவர்களே , அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் சன்னதி. பசுமலை. மதுரை. 5ஆம் ஆண்டு ஆலய வருஷாபிஷேகம். 10-02-2025 . திங்கள்கிழமை. காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் செய்து வருஷாபிஷேகம் நடக்க உள்ளது. அடியவர்கள் அனைவரும் வருக. குருவருள் , திருவருள் பெறுக. 

ஓம் அன்னை ஶ்ரீலோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  
சர்வம் சிவார்ப்பணம்.


சித்தர்கள் ஆட்சி - 431:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 1

 



இறைவா !!!!! நீயே அனைத்தும்.

அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 1

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே எம்முடைய ஆசிகள் அனைவருக்குமே அப்பனே. புசண்டனும் அப்பனே அழகாகவே வாக்கு எடுத்து உரைத்து விட்டான். ( கோவையில் இவ் சத்சங்க வாக்கிற்கு முன்னர் நடந்த சத்சங்கத்தில் காகபுசண்ட மாமுனிவர் உரைத்தார்கள். அவ் வாக்கினை அடியவர்கள் படிக்கவும்.) 

இதனால் தர்மங்கள் செய்தாலே போதுமானதப்பா. அப்பனே, என்னிடத்தில் வருபவர்கள் அனைவரும் முதலில் கோபத்தை நீக்க வேண்டும். இன்னும் போட்டி பொறாமைகள் இவைதனை அழகாகவே நீக்க வேண்டும் அப்பனே. பின் நிச்சயம் இவை எல்லாம் நீக்கி வந்தாலே யானே அருளுவேன் அப்பனே. அங்கங்கு வந்து யானே வாக்குகள் தெரிவிப்பேன் எதை என்று யான் கூற. 

அவை மட்டும் இல்லாமல் தன் கடமையை ஒழுங்காகச் செய்தாலே போதுமானதப்பா. அப்பனே இக்கலியுகத்தில் இன்னும் பக்திகள் பொய்கள் கூடும் கூடும் என்பதெல்லாம். அப்பனே இன்னும் வருவார்களப்பா, போட்டி பொறாமைகளோடு. அதனால்தான் அப்பனே நிச்சயம் அனைவருமே நன்றாகத்தான் இருக்க வேண்டும் (என்று எண்ண வேண்டும்). அதாவது கலியுகம் என்றாலே அழியுகம் என்றெல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே. கலியுகத்தில் வாழ முடியாதப்பா மனிதனால் என்றெல்லாம் சித்தர்களும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே. அதனால் அப்பனே நீதி நேர்மை தவறாமல், சரியான பாதையிலே அதாவது இறைவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு எதை என்றும் புரியாமல் இருந்தாலும் நிச்சயம் யாங்கள் சொல்லியபடி நடந்தாலே போதுமானதப்பா.

அப்பனே பாவம் புண்ணியம் சரி பார்க்கப்பட்டதே அப்பனே பிறப்பு. இதனால் அப்பனே பாவத்தாலே மிதந்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே. பின் அப்பாவத்தை எப்படித் தொலைக்க வேண்டும் என்பதை எல்லாம் தெரிவித்துக் கொண்டே வருகின்றேன். அதைத் தொலைத்தாலே போதுமானதப்பா. புண்ணியம் அப்பனே தேங்கி நிற்கின்றதப்பா அனைவரிடத்திலும். அவ் தேங்கி ( உள்ள புண்ணியத்தை ) பின் அறிந்தும் கூட அதை கலக்கிவிட அப்பனே யாங்களே என்று புசண்டனும் எடுத்துரைத்து விட்டானப்பா. 

அதனால் அப்பனே ( வடவள்ளி ஆலய அடியவர் ) இவன்தனக்கும் கூட எம்முடைய ஆசிகள் அப்பனே. நிச்சயம் அப்பனே பின் என் இடம் அப்பனே இது. யான் வருவேன் , போவேன். 

உன்னிடம் இல்லை. என்னை எப்பொழுது வைத்து விட்டாயோ அது என் இடம் அப்பனே. (அடியவருக்குத் தனி வாக்குகள் ) 

யான் இருக்கும் இடத்தில் எல்லாம் யான் வருவேன், போவேன் அப்பனே. அப்பொழுது அறிந்தும் உண்மைதனைக் கூட வெளிப்படுத்துவேன். இன்னும் ஞானங்கள் தருவேன் அப்பனே. அப்பொழுது நீ யார் என்று நீயே தெரிந்து கொள்ளலாம். 

ஆனாலும் அப்பனே ( பலர் ) இவ்வாறு திருத்தலங்கள் எல்லாம் அமைத்துவிட்டு , அப்பனே பார்த்துக்கொண்டே இருக்கின்றேன். இன்னும் போட்டி பொறாமைகள் எல்லாம் இருக்கின்றது அப்பனே. அவன் பெரியவனா? அப்பனே உன்னிடத்திற்கு யான் வந்தேன் இங்கு. ஆனாலும் இதை பல பேர் அறிந்தும் உண்மைதனைக்கூட அங்கு சென்று விட்டானா? ஏமாற்றுக்காரன் என்றெல்லாம் புலம்பி. ஆனாலும் கவலை இல்லை.  யானே அடிப்பேன் அப்பனே. 

அப்பனே உயர்தர ரகசியங்கள் கூட இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது. சோம்பேறியே, பல வேலைகளை ஒருவனுக்கு கொடுத்தேன். ஆனால் ஒருவன் கூட அறிந்தும் கூட அவன்தன் ஒழுங்காக வேலைகள் செய்வதே  இல்லை. சோம்பேறித்தனமாக சுற்றிக்கொண்டு இறைவன் நாமத்தை வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான் இங்கு ஒருவன். 

( சாட்டை அடி தனி வாக்குகள் ஆரம்பம் ஆனது. அதில் உள்ள பொது வாக்குகளை மட்டும் இங்கு அளிக்கின்றோம். ஒரு அடியவருக்கு வாக்கு ஆரம்பம். )

நம் குருநாதர் :- (வாழ்வதற்கு) அதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும்? 

அடியவர் :- ( அமைதி )

நம் குருநாதர் :- அப்பனே இப்பொழுதைக்கு அனைத்தும் யான் நல்குகின்றேன். எதை வேண்டுமானாலும் அப்பனே (நீ) பெற்றுக் கொள்ளலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா , நான் தருவதற்குத் தயார். எதை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். கேள் என்று சொல்கின்றார். ஐயா இதுதான் சமயம் பார்த்து அடிக்கின்றது என்பது. ( அடியவரைக் கேட்டுப் பெற ஊக்கப்படுத்தினார் )

அடியவர் :- ஐயா என் வாழ்க்கையில் அப்பாவுக்குச் சேவை செய்ய வேண்டும்.

நம் குருநாதர் :- அப்பனே அது நான் நினைத்தால்தான் அப்பனே. அப்பனே எந்தனுக்கு சேவை செய்து கொண்டே இருக்கின்றாய் அப்பனே. ஆனால் அப்பனே உண்ண உணவு, உடை எதை என்று புரியப்புரிய இதனால் இப்பொழுது இவந்தனக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றாய் என்று நினைத்துக்கொள் அப்பனே. ஆனால் நாளை பார்த்தால் அப்பனே மனதில் என்னென்ன எண்ணங்களோ தோன்றும் அப்பா. திருமணம் வேண்டும் என்று கேட்பாய் அப்பனே. வேலை வேண்டும் என்று கேட்பாய் அப்பனே. இன்னும் எதை எதையோ கேட்பாய் அப்பனே. ஆனால் என்னிடத்தில் உள்ளவருக்கு ஏதும் கிட்டாது அப்பனே, சொல்லிவிட்டேன் அப்பனே. அறிந்தும் கூட பல பக்குவங்கள் ஏற்படுத்துவேன்.  பல பக்குவங்கள் ஏற்படுத்தவே உந்தனுக்கு 50 வயது ஆகிவிடுமப்பா. அப்பொழுது திருமணம் வேண்டாமா?

சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு வேளை என்னிடம் வேலை செய்தால்,  ஒன்றுமே கொடுக்க மாட்டேன். பக்குவங்கள் ஏற்படுத்துவேன். அதற்குள்ளேயே 50 வயசு ஆகிவிடும். அப்புறம் என்ன செய்வாய்? (இன்னும்) கேளுங்க ஐயா. 

அடியவர் :- திருமணம் வேண்டும் ஐயா. 

நம் குருநாதர் :- அப்பனே மனது என்பது குரங்கப்பா. அப்பனே உந்தனுக்கு எதைச் செய்தாலும் இப்பொழுது எப்படியப்பா? இங்கும் அங்கும் தாவுகின்றாய் அப்பா. இப்பொழுது என்னிடத்தில் இருந்து கொள்கின்றேன் என்றாய். இப்பொழுது திருமணம் வேண்டும் என்றாய். நாளை பொழுது என்ன கேட்பாய் அப்பனே.

( அடியவர்கள் இறை, சித்த மார்க்கத்தில் செல்லும் பொழுது மிகத் தெளிவாக உயர் சிந்தனையுடன் செல்ல வேண்டியது மிக அவசியம். ) 

அடியவர் :- ஐயா எல்லாவற்றையும் கடந்து வர வேண்டும். அப்பாவுக்கு சேவை செய்ய வேண்டும். 

நம் குருநாதர் :- அப்பனே எதைக் கடப்பது? 

அடியவர் :- அப்பாவோட வழியில் வரவேண்டும். 

நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட இப்பொழுது வழியில் வரவில்லையா என்ன? 


அடியவர் :- வந்து கொண்டுதான் இருக்கின்றேன் ஐயா.


நம் குருநாதர் :- அப்பனே அப்பொழுது எப்படி இப்படிக் கேட்கலாம்? 


அடியவர் :- ( அமைதி )


நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட அப்பனே ( ….. நீண்ட தனி வாக்கு ஆரம்பமானது.  அனைத்து விதியில் உண்மைகளை அப்பட்டமாக போட்டு உடைக்க ஆரம்பித்தார் கருணைக் கடல். ) 


நம் குருநாதர் :- அனைவருக்குமே  சொல்கின்றேன் அப்பனே.  அனைத்தும் யான் கொடுக்கத் தயார். ஆனாலும் பின் சிறிதேனும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். பின் அமைதியான இருந்தவனுக்கு யான் கொடுத்துவிட்டால்  நீங்கள் சொல்வீர்கள் - யான் அமைதியாக இருந்தேன்,  நீங்கள்தான் கொடுத்தீர்கள் என்று, நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றால் யான் எங்கு செல்வது? ( தனி வாக்குகள் ) 

………..

…………

…………. 

( காதல் போதை - பொது வாக்கு) 

அப்பனே காதல் போதை பெரிய போதையப்பா. அப்பனே அனைத்திலும் தப்பித்துக் கொள்ளலாம் நிச்சயம். காதல் போதை வந்துவிட்டால் தப்பிக்க இயலாதப்பா. அவ் போதை எப்பொழுது தெளிவு ( அடையும் என்றால் ) அடிபட்டால்தான் அப்பனே. சண்டைகள் வந்தால்தான் அப்பனே. அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. (காதலித்தால்) சண்டைகள் நிச்சயம் வரும்.

……………….

……………….. 

(ஞான வாழ்க்கை குறித்த வாக்குகள் ) 


நம் குருநாதர் :- அப்பனே ஏன் எதற்காக என்னைப் பிடிக்க நினைக்கின்றீர்கள் நீங்கள் அனைவருமே? சொல்லுங்கள் அப்பனே? அனைவரும் சொல்லலாம்.


அடியவர் 1 :- நல்வழியில் செல்வதற்கு..


அடியவர் 2 :- ஞான சித்தி, ஞானம் கிடைக்க. 


நம் குருநாதர் :- அப்பனே ( அடியவர் 2 ), நீ பெரியவனப்பா. அமர்ந்தே சொல்கின்றாய் அப்பனே. இதுதான் ஞானமா? 


அடியவர்கள் :- ( அனைவரும் பலத்த சிரிப்பு )


அடியவர் 2:- மன்னித்துவிடுங்கள் ஐயா.


நம் குருநாதர் :- அப்பனே ஞானப்பாதை என்பது எவ்வளவு கடினம் என்பது தெரியுமா அப்பா? 


அடியவர் 2:- தெரியும் ஐயா.


நம் குருநாதர் :- அப்பனே அப்பொழுது தயாராக இருக்கின்றாயா? கஷ்டத்தை அள்ளித் தரலாமா?


அடியவர் 2 :- தரலாம் ஐயா.


நம் குருநாதர் :- அப்பனே தாங்க மாட்டாயப்பா. வாய்தான் சொல்கின்றது அப்பனே. உள்ளமெல்லாம் எதை எதையோ   யோசிக்கின்றது அப்பனே. 


அடியவர்கள் :- ( அமைதியாக சிரிப்புக்கள் )


நம் குருநாதர் :- அப்பனே அதனால் அறிந்தும் கூட உந்தனுக்கு ஞான வாழ்க்கை கொடுத்து விட்டால்  அப்பனே மற்றவர்கள் சொல்வார்கள். அகத்தியனை நம்பி இவன் பைத்தியமாகிவிட்டான் என்று அப்பனே. இப்பொழுது ஞானம் வேண்டுமா? அப்பனே அனைத்தும் வேண்டுமா அப்பனே? 


அடியவர் 2 :- எனக்கு ஞானம் ( கொடுங்கள் ).


நம் குருநாதர் :- அப்பனே நிச்சயம் கொடுக்க முடியாதப்பா.


அடியவர் 2 :- ஏன் ஐயா? 


நம் குருநாதர் :- அறிந்தும் கூட உன் வீட்டோரே அதாவது உன்னைத் திட்டினால் பரவாயில்லை அப்பனே. இறைவனையே சாடி விடுவார்கள். 


அடியவர்கள் :- ( அமுக்கச் சிரிப்பு ) 


நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட அப்பனே ஞானம் பின் பெற வேண்டும் என்று நிச்சயம் கடையில் விற்கின்றது அப்பனே. எடுத்துக் கொள்வாயா?


அனைத்து அடியவர்கள் , அடியவர் 2 :- ( ஞானத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டு,  குண்டூசி கீழே விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அமைதி ) 


நம் குருநாதர் : அப்பனே அறிந்தும் கூட ஞானம் என்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பேன் அப்பனே. பல கஷ்டங்கள் படவேண்டும் அப்பனே. நோய்கள் வரும் அப்பா. ஆனாலும் சென்று விடும் அப்பா. வலியில் கூட பைத்திய நிலைக்குப் போய்விடும் என்பேன் அப்பனே. வேண்டாம் அப்பா. அப்பனே நிச்சயம் உந்தனுக்கு இல்லை. இப்பொழுது நீ கேட்டாலும் கொடுக்கப் போவதில்லை. வேறென்ன  வேண்டும் என்று கேள்.


============

( உயர் ஞானம் தொடர்பான இவ்வாக்கை தட்டச்சு செய்யுபோதே , மனம் வெறுத்து கனத்த,  வெற்று மனதுடன் தட்டச்சு செய்ய வேண்டிய ஒரு சூழ் நிலை என்றால் இவ் வாக்கின் உன்னத அதி உயர் பரிசுத்த புண்ணிய நிலையை என்னவென்று சொல்ல!!!!!!!!!!. ) 

==============


(ஞானம் தொடர்பான வாக்கு நிறைந்து , மீண்டும் பொது வாக்கு ஆரம்பம். இப்போது உங்களால் அதனை பின் வரும் வாக்குகளில் உணர இயலும் )


அடியவர் 2 :- ( தனி குடும்ப நபர் நலன் தொடர்பான கேள்விகள்) 


நம் குருநாதர் :- ( தனி வாக்குகள் ) அப்பனே பிறந்தால்தான் அதாவது வளர்த்தால்தான் குழந்தையா. இங்கு ஒருவன் இருக்கின்றானே , உன் தம்பியாக எண்ணி இவன் தனக்கு நல்லது சொல் அப்பனே. 


அடியவர் 2 :- தினமும் 3 மணிக்கு எழுந்திரியுங்கள்… ( என்று நல் புண்ணியச் செய்திகளைச் சொல்ல ஆரம்பித்த உடனே)


நம் குருநாதர் :- அப்பனே இதைச் சொல்லாதே அப்பனே. காதல் பற்றிச் சொல்.


அனைத்து அடியவர்களும் :- ( பலத்த சிரிப்புக்கள் ) 


அடியவர் 2 :- காதலைப் பற்றி நான் என்ன சொல்வது..


அனைத்து அடியவர்களும் :- ( மீண்டும் பலத்த சிரிப்புக்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்களுக்குத் தெரிந்ததனால் உங்களை அழைத்துள்ளார். தெரியாமல் உங்களை அழைக்க மாட்டார். ( அதாவது ஒரு பாசமுள்ள அண்ணன் இடத்தில் இருந்து தம்பியை , நேர் நல் வழி நடத்தும் படி உரைக்க வேண்டும் என்று புரிந்து கொள்க ) 


அடியவர் 2 :- காதல் செய்வது வேஸ்ட். அதன் மூலம் சில பிரச்சினைகள் வரும். அது மட்டும் இல்லாமல் நாம் போகும் வழியில் சரியாக செல்ல முடியாது. குடும்பத்திலும் பிரச்சினை வரும். அதனால் love marriage வேண்டாம் . நீங்க (பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்) arranged marriage செய்து கொள்ளுங்கள். ரொம்ப நல்லது. 


நம் குருநாதர் :- அப்பனே கேட்க மாட்டானப்பா. ( மீண்டும்)  சொல். 


( மீண்டும் சில நல் வாக்குகளை நல்கினார்கள் அவ் அடியவர்.  ) 


( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் உரைத்த சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Friday, February 7, 2025

சித்தர்கள் ஆட்சி - 430 :- பிரதோஷ வேளை ரகசியம் - அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு - Year 2025







இறைவா நீயே அனைத்தும்.
இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
சித்தன் அருள் - 1764 - பிரதோஷ வேளை ரகசியம்
நிச்சயம் பிரதோஷ வேளைகளில் ஏதாவது ஒன்றை திருத்தலத்திற்கு சென்று செய்து கொண்டே வாருங்கள் அப்பனே. இன்னும் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டு. உங்கள் குழந்தைகளுக்கும் கூட முன்னேற்றங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே.
அப்பனே இதனை நீங்கள் அனைவரும் செய்யலாம் அனைவருக்கும் சொல்லலாம் என்பேன் அப்பனே . என் பக்தர்கள் அனைவரும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என்பேன் அப்பனே.
அப்பனே இதனை தொடர்ந்து செய்து கொண்டே வரவேண்டும் என்பேன். இவையெல்லாம் செய்கின்ற பொழுது சில தடை தாமதங்கள் நீங்கும் அப்பா. பின்பு தான் அனைவருக்குமே வெற்றி கிடைக்கும் அப்பா.
விளக்கம் : பிரதோஷ காலசமயங்களில் ஈசன் ஆலயத்திற்கு சென்று ஏதாவது சேவைகள் வழிபாடு மற்றும் செய்து வர வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டு. உங்கள் குழந்தைகளுக்கும் கூட முன்னேற்றங்கள் ஏற்படும்
தேதிதமிழ் தேதி
11-01-2025
சனி
மார்கழி மாதம் 27
வளர்பிறை, த்ரயோதசி
27-01-2025
திங்கள்
தை மாதம் 14
தேய்பிறை, த்ரயோதசி
10-02-2025
திங்கள்
தை மாதம் 28
வளர்பிறை, த்ரயோதசி
25-02-2025
செவ்வாய்
மாசி மாதம் 13
தேய்பிறை, த்ரயோதசி
11-03-2025
செவ்வாய்
மாசி மாதம் 27
வளர்பிறை, த்ரயோதசி
27-03-2025
வியாழன்
பங்குனி மாதம் 13
தேய்பிறை, த்ரயோதசி
10-04-2025
வியாழன்
பங்குனி மாதம் 27
வளர்பிறை, த்ரயோதசி
25-04-2025
வெள்ளி
சித்திரை மாதம் 12
தேய்பிறை, த்ரயோதசி
10-05-2025
சனி
சித்திரை மாதம் 27
வளர்பிறை, த்ரயோதசி
24-05-2025
சனி
வைகாசி மாதம் 10
தேய்பிறை, துவாதசி
08-06-2025
ஞாயிறு
வைகாசி மாதம் 25
வளர்பிறை, த்ரயோதசி
23-06-2025
திங்கள்
ஆனி மாதம் 9
தேய்பிறை, த்ரயோதசி
08-07-2025
செவ்வாய்
ஆனி மாதம் 24
வளர்பிறை, த்ரயோதசி
22-07-2025
செவ்வாய்
ஆடி மாதம் 6
தேய்பிறை, த்ரயோதசி
06-08-2025
புதன்
ஆடி மாதம் 21
வளர்பிறை, அதிதி
20-08-2025
புதன்
ஆவணி மாதம் 4
தேய்பிறை, துவாதசி
05-09-2025
வெள்ளி
ஆவணி மாதம் 20
வளர்பிறை, த்ரயோதசி
19-09-2025
வெள்ளி
புரட்டாசி மாதம் 3
தேய்பிறை, சதுர்தசி
04-10-2025
சனி
புரட்டாசி மாதம் 18
வளர்பிறை, திதித்துவம்
18-10-2025
சனி
ஐப்பசி மாதம் 1
தேய்பிறை, சுன்யதிதி
03-11-2025
திங்கள்
ஐப்பசி மாதம் 17
வளர்பிறை, த்ரயோதசி
17-11-2025
திங்கள்
கார்த்திகை மாதம் 1
தேய்பிறை, த்ரயோதசி
02-12-2025
செவ்வாய்
கார்த்திகை மாதம் 16
வளர்பிறை, த்ரயோதசி
17-12-2025
புதன்
மார்கழி மாதம் 2
தேய்பிறை, த்ரயோதசி
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!